செய்தி
அழுத்தங்களினால் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றார்! பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்- ஐ.தே.க.
[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 12:36.32 AM GMT ]
மோ்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றமைக்கு சில தரப்புகளிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமா என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கேள்வி எழுப்பியது.

இராணுவ மேஜரின் வழக்குரைஞர் வழக்கை வாபஸ்பெற்றுள்ளதாகவும் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளதாக தென்படுவதாகவும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி அதிகாரி ஒருவரும் இதேபோன்று முறைப்பாட்டை வாபஸ்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சுட்டிக்காட்டினார்.

சமுர்த்தி அதிகாரியின் நிலைக்கு இராணுவ அதிகாரியும் இறங்கிவிட்டாரா என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என அவர் கூறினார்.

அத்துடன், முப்படை பதவி உயர்வுகளிலும் அரசியல் நட்பே ஆதிக்கம் செலுத்துகின்றது. திறமை சேவைக்காலம் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. தம்முடன் நட்பாக இருக்கும் போதே தளபதியாக நியமிக்கப்படுகின்றார்கள்.

போதைவஸ்து வியாபாரிகளும் பாதாள குழுக்களுமே நாட்டை நிர்வகிக்கின்றனர் என்று ஐ.தே.க. எம்.பியான அஜித் பி. பெரேரா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போது இடம்பெற்ற ரணவிரு சேவா அதிகார சபை திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மேஜரான சந்தன பிரதீப் சுசேன என்பவரை இராணுவ சேவையிலிருந்து உடனடியாக நீக்கி விடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.