செய்தி
பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 11:08.52 AM GMT ]

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.

எப்.ஐ.ஆர் பதிவு பிரதியை  பார்க்க அனுமதிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்,

அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை  செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.

விஜயராஜ் உறவினர்களோடு, அனைத்திந்திய பெருமன்றம், விடியல் பெண்கள் மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் சமாதானம் பேசிவருகின்றனர்.

தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்தால்தான் அவரது உடலை அங்கிருந்து எடுக்கவே நாங்கள் அனுமதிப்போம் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 04:43.14 AM ]
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 03:02.46 AM ]
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Thursday, 20-06-2013, 02:53.42 AM ]

திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:43.36 AM ]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.