செய்தி
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு இன்னும் இலங்கையில் செயற்படுகிறது
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 10:16.29 AM GMT ]
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டிருப்பதாக த ஏசியன் ஏஜ்.பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இந்திய இராணுவத் தகவல்கள் அடங்கிய இறுவட்டு ஒன்றுடன் பாகிஸ்தான் தீவிரவாதப்படையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, த ஏசியன் ஏஜ்; இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் கடந்த 2004ம் ஆண்டு பசீர் வாலி மொஹமட் என்ற முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவரை இலங்கைக்கான தமது உயர்ஸ்தானிகராக நியமித்தது.

அவர் இலங்கையில் செயற்பட்டு, தென்னிந்திய செயற்பாடுகள் குறித்து நிரந்தரமாக அவதானிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றே இந்த நியமனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் நியமிக்கப்பட்ட சில மாதங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இவரை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

எனினும் சம்பவத்தில் அவரது பாதுகாவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் 7 பேர் கொல்லப்பட்ட போதும் அவர் உயிர்தப்பினார்.

முன்னாள் பாகிஸ்தானிய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் இலங்கையில் இருந்து தென்னிந்திய செயற்பாடுகளை அவதானிக்கும் பொருட்டே வாலி மொஹமட்டை இலங்கைக்கு அனுப்பியதாக நம்பப்படுகிறது.

அண்மையில் இந்திய இராணுவ தகவல்களுடன் தப்பி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், தம்மிடம் உள்ள தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரத்திடம் வழங்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஏ. யின் தென்னிந்திய மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையை மையப்படுத்தி இன்னும் தொடர்கிறது என்பது உறுதியாகி இருப்பதாக, த ஏசியன் ஏஜ் தெரிவித்துள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:01.20 PM ]
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின் சாராம்சத்தை குறைக்க திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 09:29.47 PM ]
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாக, தமிழீழ வடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவு, தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது.
[ Wednesday, 19-06-2013, 08:55.15 PM ]
அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது.
[ Wednesday, 19-06-2013, 04:23.29 PM ]
படையினரை தொடர்ந்தும் நிலைநிறுத்துமாறு யாழ்ப்பாண மக்கள் கோருவதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.