அவர் விஜயம் செய்யவுள்ள புதுடெல்லி மற்றும் சாஞ்சி பகுதிகளின் பாதுகாப்புகளை, இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் நாள் புதன்கிழமை இந்தியா செல்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.