செய்தி
 Photo
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2012, 05:46.36 AM GMT ]
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்விற்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினருமாகிய ராம்கே கிளார்க் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு கனடாவில் இருந்து சென்ற இசைக் குழுவினர்களினால் சிறந்த இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தனர். அதில் அமெரிக்காவில் இருக்கும் இளம் தமிழ் பாடகர்களும் கனடாவில் இருந்து வருகை தந்த இளம் பாடகர்களும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.

இந் நிகழ்விற்கான செலவினங்களை நியூயோர்க் நகர தமிழ் வர்த்தகர்கள் பொறுப்பேற்றது மாத்திரமன்றி, இந் நிகழ்வின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்காக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ அரசாங்கத்திற்கு உறுதுணையாக பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:43.41 PM ]
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:35.09 PM ]
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டிருந்து தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.  
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.