செய்தி
சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் கல்லால் எறிந்து கொலை!- வவுனியாவில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 05:00.23 AM GMT ]
மதுபோதையில் சென்ற இரு இளைஞர்களுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த கடை உரிமையாளர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

வவுனியா, ஓயா சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் எஸ். கந்தராஜா (வயது55)  என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்நாள் இரவு மதுபோதையில் குறித்த கடைக்குச் சென்ற இரு இளைஞர்களும் சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.

இவர்கள் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் போல் தோற்றமளித்ததாலும் மதுபோதையில் இருந்ததாலும் சிகரெட் வழங்க கடை உரிமையாளர் மறுத்துள்ளார்.

இதனால் அவர்கள் கற்களால் குறித்த கடை உரிமையாளரைத் தாக்கியுள்ளனர்.

அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 02:20.52 AM ]
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 02:18.47 AM ]

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:14.38 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Friday, 24-05-2013, 11:59.14 PM ]
மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
[ Friday, 24-05-2013 19:34:02 GMT ]
அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
[ Saturday, 25-05-2013 02:32:15 GMT ]
வனத்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் கலாபவன் மணி பொலிசில் சரணடைந்தார்.
[ Friday, 24-05-2013 19:54:44 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 13:33:12 GMT ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.