டெசோ மாநாட்டை கட்சித் தலைவர்கள் பங்கேற்பதை தடுக்கும் முயற்சியில் பிரசாத் காரியவசம்
எனினும், எந்தவொரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் கலைஞரிடம் கலந்துரையாடுமாறு தாம் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்வரும் 12 ம் திகதி நடைபெறவுள்ளது..
டெசோ மாநாட்டில் பங்கேற்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
ஒகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறயிருக்கும் டெசோ மாநாடு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தருணத்தில் இலங்கைத் தூதுவர் என்னை வந்து சந்தித்தார்.
அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரிடம் கூறினேன், தமிழக மக்களை நீங்கள் நேரில் சந்தியுங்கள்.
இலங்கை அரசு மற்றும் தலைவர் பற்றிய அவர்களின் கருத்துக்களை அறியுங்கள். மேலும், திமுக தலைவர் கலைஞரையும் சந்தியுங்கள் என்று எனது கருத்தை உறுதியாக கூறிவிட்டேன் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.