செய்தி
 Photo
கொக்கொஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கியது இலங்கை அகதிப் படகு: 4 பேர் நீந்திக் கரைசேர்ந்துள்ளனர்
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:33.58 AM GMT ]
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற அகதிப்படகொன்று கொக்கோஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கிக் கொண்டதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொக்கோஸ்தீவிலிருந்து 200 மீற்றல் தூரத்தில் இலங்கையிலிருந்து சென்ற 67 பயணிகளைக் கொண்ட படகு நேற்றுக் காலை 8 மணியளவில் கற்பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர். இவ்வாறு கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஜக் ஓ டோனல்ட் என்பவர், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.

கரையைச் சேர்ந்த நால்வரும், கொக்கோஸ் வாசியிடம், படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர். ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, ஏனைய புகலிடக் கொரிக்கையாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் சுகாதாரம் மற்றும் உடல்நிலைகளை அறிவதற்காக கொக்கோஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 04:43.14 AM ]
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 03:02.46 AM ]
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Thursday, 20-06-2013, 02:53.42 AM ]

திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

[ Thursday, 20-06-2013, 02:43.36 AM ]

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

[ Thursday, 20-06-2013, 02:38.27 AM ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.