செய்தி
கைதிகளின் படுகொலை வரிசையில் நிமலரூபன், டெல்றொக்சன் இவர்களுக்கு அடுத்தது யார்?- பா.உ சி.சிறீதரன்
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:15.27 PM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த தமிழ் அரசியல் கைதி அடித்து படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவரது உடலை சுதந்திரமாக சொந்த ஊரில் மத அனுட்டானங்களுடன் நல்லடக்கம் செய்வதற்கு கூட இந்த அரசு தடை விதிக்க முயற்சிக்கின்றது.

இதன் மூலம் அரசாங்கம் தமிழர்களை இன்னமும் மனிதர்களாக கூட நினைக்கவில்லை என்பதையே உணரமுடிகின்றது. இந்த அரசாங்கம்தான் தமிழர்களுக்கொரு தீர்வினை பெற்றுத் தரும் என சர்வதேசம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றது.

இன்றைய நிலையில் நாம் ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக சர்வதேசத்திற்கு கூறிக்கொள்கின்றோம். மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்திருக்கின்றார்.

டெல்றொக்சனின் உயிரிழப்பு தொடர்பாகவும், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பொலிஸார் தொடர்ந்து இடையூறு விளைவிக்க எடுத்துக் கொண்ட முயற்சி தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

அதாவது டெல்றொக்சன் அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவருக்கு முன்னர் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டார். நாளை, நாளை மறுதினம் யார்..? என்ற கேள்வியோடுதான் நாங்கள் ஒவ்வொரு நாளையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நாம் ஒருவரின் மரணத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் அந்த இளைஞனின் மரணத்தின் பின்னால் எங்கள் இனத்தின் உண்மையான நிலைவரம் உலகத்தின் மனசாட்சிக்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் அதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

நிமலரூபன், டெல்றொக்சன் இவர்கள் எங்கள் இனத்தின் நிலையை தங்கள் மரணத்தின் மூலம் காண்பித்திருக்கின்றார்கள். இந்த இளைஞர்களின் படுகொலைகளுக்கு நிச்சயமாக உலகம் பதில் சொல்லவேண்டும். அதற்கான காலம் நிச்சயமாக வரும், அதற்கான அந்த நோக்கத்திற்காக நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

யுத்தம் தீர்ந்து ஜனநாயகம் மலர்ந்துள்ள தேசத்தில் குரூரமாக படுகொலை செய்யப்பட்ட எங்கள் சொந்தங்களுக்காக எங்கள் உளமார்ந்த அனுதாபங்களை நாங்கள் கூறிக்கொள்கின் றோம்.

அவர்களுடைய தியாகங்கள் நிச்சயமாக ஒருநாள் அர்த்தமுள்ளதாக்கப்படும், இதற்கான அனைத்து தமிழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்று திரளவேண்டும் என்றார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.