செய்தி
 Photo
மன்னார் நீதிமன்ற தாக்குதலின் எதிரொலி!மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளும் பணி பகிஸ்கரிப்பு
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 03:57.31 PM GMT ]
மன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை காலை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றங்கள் என்பனவற்றில் இந்த பணிப் பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் வினோபா இந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மன்னார் நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறிய சிலர் நீதிமன்றத்தை சேதப்படுத்தியதுடன் நீதிமன்றத்தையும் மிரட்டியுள்ளதுடன் அங்கு கடமையில் இருந்தோர் தமது கடமைகளை செய்யவிடாது இடைஞ்சல்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தை சேதப்படுத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதற்கு மூல காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும்.

இவ்வாறான அராஜக நிலைகள் எதிர்காலத்தில் நீதிவான்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மன்னார் சட்டத்தரணிகள் சடங்கம் எமது கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து இந்த பகிஸ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று நீதிமன்றுக்கு வரவிருந்த வழக்குகள் அனைத்தும் பணிப் பகிஸ்கரிப்பு காரணமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 05:33.29 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

[ Sunday, 26-05-2013, 04:49.59 AM ]
திருகோணமலை, கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Sunday, 26-05-2013, 04:07.05 AM ]
போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று அறியவருகின்றது.
[ Sunday, 26-05-2013, 03:34.32 AM ]
டொமினிக் குடியரசில் வைத்து அண்மையில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இன்னும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 26-05-2013, 03:27.30 AM ]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013 05:36:28 GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
[ Sunday, 26-05-2013 04:53:49 GMT ]
திருமண விழாவில் மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 05:45:57 GMT ]
ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி ஆனது நீரிலிருந்து பாதுகாப்புடைய அதிநவீன டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
[ Sunday, 26-05-2013 05:41:43 GMT ]
ஆர்யா - நயன்தாரா நடித்த ராஜாராணி படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.