சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். கட்சியில் இணைந்து கொள்வதற்கு பூரணமான ஒத்துழைப்புக்களை நான் வழங்குவேன்.
நிபந்தனைகள், சட்டங்களை பிறப்பிக்காது சரத் பொன்சேகாவிற்கு உரிய பதவிகளை வழங்க கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரத் பொன்சேகா கட்சியில் இணைந்து கொண்டால் அது கட்சிக்கு மேலும் வலிமை சேர்க்கும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை. உறுப்பினர்களுக்கு இடையில் மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி போதிரணசிங்க அமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது சஜித் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமாயின் உத்தியோகபூர்வமாக அது தொடர்பில் அறிவிக்க வேண்டும் எனவும் தலைமை தாங்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியை கலைக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.