செய்தி
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுமி மரணம்! முறையான சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 10:04.41 AM GMT ]

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் தொடங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவருக்கு முறையான சிகிச்சையளிக்காமை காரணமாக அந்த சிறுமி மரணமானதையிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலையின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிப்படைந்த சிறுமியின் உறவினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அண்மையில் மரணமானவர் தொடங்கொட விஜயகுணரட்ன கம பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதான சிறுமி என தெரிவிக்கப்படுகிறது.

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கிய நிலையில், முதலில் அவர் தொடங்கொட வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டுவரும் பொழுதே சிறுமி உயிரிழந்து விட்டதாக தொடங்கொட மருத்துவர்கள் தெரிவித்தனர்

எவ்வாறாயினும் சிறுமியை அவரது தந்தை நாகொட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகொட மருத்துவர்கள் அந்த சிறுமி உயிரிழந்து விட்டதை உறுதி செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சிறுமியின் தந்தை, தொடங்கொட வைத்தியசாலையின் மருத்துவர்களின் அசமந்தப் போக்கின் காரணமாக தனது மகள் மரணித்தாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே, நாகொட வைத்தியசாலையின் மருத்துவர்கள் சேவையில் இருந்து இடைவிலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாகொட மருத்துவ மனையில் பணியாற்றுவதில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நளின்
ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு செல்வதற்கு தமக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாளை தொடக்கம் அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:43.41 PM ]
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:35.09 PM ]
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டிருந்து தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.  
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.