செய்தி
இலங்கையில் அரச பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக அதிகரிக்க முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 07:25.20 AM GMT ]
இலங்கையில் அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 55 ஆக உள்ளது. எனினும் 60 வயது வரை சேவை நீடிப்புப் பெற முடியும்.

எவ்வாறாயினும், 57 வயதுக்குப் பின்னர், ஆண்டுதோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும். புதிய திட்டத்தின் படி, அரச பணியாளர்கள் 60 வயது வரை சேவை நீடிப்பு கோராமலேயே பணியாற்ற முடியும்.

அதேவேளை அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்ந்தும் 55 வயதாகவே இருக்கும். அரச பணியாளர்கள் 55 வயதுடன் ஓய்வுபெற விரும்பினால் ஓய்வு பெற்று செல்ல முடியும்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 10:13.25 AM ]
போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் அடியோடு நிராகரித்துள்ளது. அத்துடன் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 10:11.50 AM ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 09:41.53 AM ]
சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார்.
[ Saturday, 25-05-2013, 09:23.26 AM ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 10:19:13 GMT ]
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 11:02:31 GMT ]
1980களில் கொலிவுட்டை கலக்கிய நதியா, M.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.