இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்! உலக தமிழர் பேரவை கோரிக்கை
தமிழர்களுக்கு எதிரான மனித இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை சார்ப்பான சிங்கள போட்டியாளர்களை ஒலிம்பிக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை அடுத்து, இலங்கைத் தமிழர் படுகொலையை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வகையில் லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சிவந்தனுக்கும் அந்த பேரவை ஆதரவு அளித்துள்ளது.
இது தவிர, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததுடன், பிரித்தானிய வாழ் தமிழ் உணர்வாளர்களின் செயற்பாடுகளால் அது கைகூடவில்லை என அறியக் கிடைத்துள்ளது.