செய்தி
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அணி திரளும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
[ சனிக்கிழமை, 28 யூலை 2012, 05:54.40 AM GMT ]
அமைச்சர் ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக இன்று ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னதாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரும் காலியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் இன்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று கூடி சங்கத்தின் சார்பில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே நேற்றும்; மதிய வேளைத் தொழுகையின் பின்னர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ரிசாத்தின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்திலும் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மொகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் முழு அளவினில் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென வீதி வழியாக ஊர்வலமாக பயணித்தனர்.

அதேவேளை கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ரிசாத்தின் ஆதரவாளர்களது கண்டன பேரணிக்கென மன்னாரிலிருந்து 13 பேருந்துகளில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 11:35.13 PM ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.
[ Tuesday, 18-06-2013, 11:17.45 PM ]
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டு தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 21:06:02 GMT ]
ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு பொலிசார் கட்டாயப்படுத்துவதாகவும், கடுமையாக சித்ரவதை செய்வதாக டெல்லி நீதிமன்றத்தில் புக்கிகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.