நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2009 ம் ஆண்டு ஈழத்தில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலரும் இலங்கையில் இருந்து தப்பித்த வண்ணமே இருந்தனர். சிலர் நேரடியாக இலங்கையில் இருந்து இந்தோனேசியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றனர். சிலர் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்து முகாமில் தங்கி இருந்தனர்.
வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமிழ் மக்களுக்கச் சொந்தமான 2ஆயிரத்து 590ஏக்கர் விவசாய நிலம் 1983ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை விடுவிக்க வலியுறுத்தி நிலத்திற்குச் சொந்தமான தமிழ் மக்கள் வெலிஓயா பிரதேச செயலகத்திடம் மகஜர் கையளித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
புற்று நோயை உண்டாக்கக் கூடிய ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு முகத்துக்கு பூசும் வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது டிஸ்னி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம் மான்ஸ்டர் யுனிவர்சிட்டி.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.